"சினிமா பாணியில் நடந்த கொலை சம்பவம்"... நெல்லையில் பரபரப்பு...

x

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள வெம்மணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் என்கிற மணி. இவர் உவரியில் உள்ள ரசிகா என்ற மாற்று சமூகப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கூட்டப்பனை கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்து வரும் சுபாஷூக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த சுபாஷை அழைத்துச் சென்ற ராஜா, அவரை சரமாரியாக வெட்டி முட்புதருக்குள் இழுத்துச் சென்று வீசியுள்ளார். அவரின் சடலத்தை பார்த்து பதறிப்போன அப்பகுதி மக்கள் உடனே போலீசில் தகவல் தெரிவித்தனர். இந்த கொலையில் ராஜாவை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்