கேரளாவில் இன்றும், நாளையும் திரையரங்குகள் வேலை நிறுத்தம்..

x

கேரளாவில், திரையரங்குகள் இரண்டு நாள்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில், திரையரங்கில் படங்கள் வெளியாகி 42 நாள்களுக்கு பின்னர் தான், ஓடிடியில் வெளியிட வேண்டுமென திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான '2018' என்ற திரைப்படம், இன்றைய தினம் ஓடிடியில் வெளியாகிறது. 33 நாள்கள் மட்டுமே முடிவடைந்த நிலையில், திரைப்படம் ஓடிடியில் வெளியாவதால், திரையரங்குகளை இன்றும், நாளையும் மூடி வேலை நிறுத்தம் செய்வதாக, திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, அதற்குரிய பணம் திருப்பி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்