ராஜ்பவனில் கிறிஸ்துமஸ் விழா - ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்பு

x

எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமல்லாமல், இந்த உலகிற்கு, அன்பு, இரக்கம், மன்னிப்பு என்ற செய்தியை அளித்தவர் இயேசு என்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று கேக் வெட்டிய பின், நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, இயேசு, மற்றவர்களுக்காக வாழ்ந்தார், மற்றவர்களுக்காக துன்பப்பட்டார் என்று தெரிவித்தார்.

மற்றவர்களுக்காக உயிர் நீத்த இயேசு, தம்மை சிலுவையில் அடித்தவர்களிடம் கூட அன்பு செலுத்தியதோடு, அவர்களை நேசித்ததாகவும்,

அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடினார் என்றும் கூறினார். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும், அன்பு, இரக்கம், மன்னிப்பு என்ற செய்தியை அளித்தவர் என்று தெரி்வித்தார். மனித நேயத்தை காக்க உலகிற்கு வந்தார் இயேசு என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்