சித்திரை முழு நிலவு நாள்... கண்ணகி, தொல்காப்பியருக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

x

சித்திரை முழு நிலவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில், கண்ணகி மற்றும் தொல்காப்பியருக்கு, அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சித்திரை முழு நிலவு நாளான இன்று அமைச்சர்கள் சேகர் பாபு , கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர், மெரினா கடற்கரையில் கண்ணகி மற்றும் தொல்காப்பியர் சிலைகளுக்கு கீழ் வைக்கப்பட்ட அவர்களது திருவுருவ படத்திற்கு, மரியாதை செலுத்தினர். அதேபோல் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், கண்ணகி மற்றும் தொல்காப்பியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்