கோயில் குளத்தில் கேட்ட குழந்தையின் அழுகை சத்தம் - பொதுமக்கள் அதிர்ச்சி

x

திருவள்ளூரில், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கோவில் குளம் அருகே வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரராகவர் கோவில் குளத்தின் அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது பச்சிளம் ஆண் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதனிடையே குழந்தையை வீசியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகினறனர்.


Next Story

மேலும் செய்திகள்