கபடியில் வெற்றி பெற்ற சிறுவர்கள்... "கோப்பையுடன் ஊர் செல்ல முடியவில்லை" - ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் மனு

கபடியில் வெற்றி பெற்ற சிறுவர்கள்... கோப்பையுடன் ஊர் செல்ல முடியவில்லை - ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் மனு
x


சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிறுவர்கள் சிலர், ஊரில் தங்களை ஒதுக்கி வைத்துள்ளதால் கபடியில் வென்ற கோப்பையுடன் ஊர் செல்ல முடியவில்லை எனக்கூறி, புகார் மனு அளித்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இந்த புகார் மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்.

அதில், கபடி போட்டியில் விளையாடி வென்று ஊர் திரும்பி, கோயிலில் வழிபட முயன்ற போது, தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

ஊரைவிட்டு ஒதுக்கியவர்களின் பட்டியலையும் ஆட்சியரிடம் அவர்கள் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்