சொத்துக்களை வாங்கி கொண்டு தெருவில் விட்ட பிள்ளைகள் - தாய், தந்தை செய்த தரமான சம்பவம்

x

பெற்றோரை கவனிக்காத பிள்ளைக்களுக்கு வழங்கிய சொத்தை மீண்டும் அந்தப் பெற்றோரே பெற்றுக்கொண்ட சம்பவம் தென்காசியில் அரங்கேறியிருக்கிறது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள ஐந்தாங்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சீதாராம் - சண்முக வடிவு தம்பதி.

இவர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு தனது மகன்கள் கடல்மணிராஜா மற்றும் செல்லப்பாண்டி ஆகியோருக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்ததாக தெரிகிறது.

சொத்துக்களை பெற்றுக்கொண்ட தனது மகன்கள் தங்களை முறையாக கவனித்துக்கொள்ளவில்லை எனவும், தனது சொத்துக்களை மீட்டுத் தருமாறும் தென்காசி கோட்டாட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

மனுவை விசாரித்த கோட்டாட்சியர் இரு மகன்களும் பெற்றோரை பராமரிக்க இயலாது என கூறியதன் பலனாக , இருவருக்கும் முதியவர் எழுதிக் கொடுத்த ஆவணங்கள் செல்லாது என உத்தரவிட்டார். இதையடுத்து தள்ளாத வயதில் உள்ள சீதாராம் சண்முக வடிவு தம்பதிக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீண்டும் அவர்கள் வசமானது.


Next Story

மேலும் செய்திகள்