கவிழ்ந்த பள்ளி பேருந்துக்குள் சிக்கிய குழந்தைகள் - மாணவர் பரிதாப பலி

x

கவிழ்ந்த பள்ளி பேருந்துக்குள் சிக்கிய குழந்தைகள் - மாணவர் பரிதாப பலி - "ஓட்டுநரால் நிகழ்ந்த விபரீதம்"

மத்திய பிரதேசத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாகர் மாவட்டத்தின் ரஜத்கரில் 40 பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்திற்குள்ளானது. அதில் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில் இருமாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

எஞ்சிய 37 மணவர்கள் பாதுகாப்பாக மீட்கபட்டுள்ளதாக சாகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் ஒட்டுநர் செல்போனில் பேசியபடி பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பேருந்து உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்