தனியார் மருத்துவமனையில் பிரசவம் - பரிதாபமாக பிரிந்த தாயின் உயிர்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

x

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தகரை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி கவியரசி, இரண்டாவது குழந்தை பிரசவத்துக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, அவருடைய உடல்நிலை மோசமனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கவியரசியையும், குழந்தையையும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விட்டு சென்று விட்டனர். அங்கு கவியரசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தவறான அறுவை சிகிச்சையால்தான் கவியரசி உயிரிழந்ததாகக் கூறி அவருடைய உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் குடியிருப்பை முற்றுகையிட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்