அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழிக்க உத்தரவு - கேரளாவில் அதிரடி

கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை கலப்புப் பள்ளிகளாக மாற்ற குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
x

கேரளாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை கலப்புப் பள்ளிகளாக மாற்ற குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

vovtகேரளாவில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அடுத்த கல்வியாண்டிலிருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்துவிட்டு, அப்பள்ளிகளை கலப்புப் பள்ளிகளாக மாற்றி, இணைக் கல்வியை அமல்படுத்த வேண்டுமென கேரள குழந்தை உரிமைகள் ஆணையம், கேரள கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன், பள்ளிகளின் கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், இணை கல்வியின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ள குழந்தை உரிமைகள் ஆணையம், அடுத்த கல்வியாண்டு முதல் இணை கல்வியை அமல்படுத்த, 90 நாட்களில் செயல்திட்டத்தை உருவாக்குமாறு கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர், பொதுக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்