3 மணிநேரமாக பெற்றோரை தேடி அழுத குழந்தை -பெற்றோரிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்த போலீசார்

x

3 மணிநேரமாக பெற்றோரை தேடி அழுத குழந்தை -பெற்றோரிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்த போலீசார்


உசிலம்பட்டியில் தாய் தந்தைக்காக 3 மணி நேரத்திற்கும் மேலாக தவித்த 3வயது பெண் குழந்தையை பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை அழுது கொண்டிருந்தது. உசிலம்பட்டி போலீசார் குழந்தையை கைப்பற்றி, பெற்றோர் விவரங்களை கேட்டறிந்தனர். தன்னுடைய தாயின் பெயரை மட்டும் கூறிய குழந்தை அழுதபடியே இருந்தது. இதையடுத்து சமூகவலைதளங்கள் மூலமாக பெற்றோரை தேடிய போலீசார், இறுதியில் கருகட்டான்பட்டியைச் சேர்ந்த மீனா என்ற பெண்ணின் குழந்தை என கண்டறிந்தனர். அவரை காவல்நிலையத்திற்கு நேரில் அழைத்து, குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்