வாளியில் வெந்நீர் ஊற்றி வைத்த தந்தை - துடிதுடித்து பலியான குழந்தை - சென்னையில் சோகம்

x

சென்னை, அரும்பாக்கத்தில் சுடு தண்ணீர் கொட்டி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அரும்பாக்கம் ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் பரத்குமார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு ஒன்றரை வயதில் அரிகரன் என்ற ஆண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று, குளிப்பதற்காக சுடு தண்ணீர் வைத்த பரத்குமார், தண்ணீரை வாளியில் ஊற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக வாளியை பிடித்து இழுத்தபோது குழந்தையின் மீது சுடு தண்ணீர் கொட்டியுள்ளது. இதனால், வலியில் துடிதுடித்து போன குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அனால், சிகிச்சை பலனின்றி குழந்தை மருத்துவமனையிலே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், குழந்தை உயிரிழந்தது குறித்து தீவிர விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்