உடல் நிலை குறைவால் முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

x

முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதோடு, உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே மருத்துவமனைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளை சந்தித்தார்.

பின்னர் அவரது உடல் நலம், சிகிச்சை முறைகள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்