"பள்ளித்திறப்பில் மாற்றம் இருந்தால் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

x

திருச்சி மாவட்டம் ஒத்தக்கடையில், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் ஆயிரத்து 348வது சதயவிழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூன் மாதம் திட்டமிட்ட தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், பள்ளி திறப்பில் மாற்றம் இருந்தால் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்