சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்து சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

x

சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்.

கடந்த 23-ந்தேதி அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். சிங்கப்பூரில் 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பின்னர் ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பானில் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 2024ஆம் ஆண்டு சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்