நாட்டை உலுக்கிய படகு விபத்து.. நேரில் பார்வையிடுகிறார் முதல்வர் பினராயி விஜயன்

x

கேரளாவில் மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி , ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரளா மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அனைத்து அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்கட்சி தலைவர் விடி.சதீஷன் ஆகியோர் விபத்து நிகழ்ந்த இடத்தை இன்று நேரில் பார்வையிட உள்ளனர்.

இதனிடையே மீட்புப் பணிகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்