"மோசடி வழக்கில் சிக்க வைக்க முதல்வர் பினராயி விஜயன் சதி" - கேரள மாநில காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

x

கேரளாவில் தன்னை மோசடி வழக்கில் சிக்க வைக்க முதல்வர் பினராயி விஜயன் சதி செய்வதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறியுள்ளார். கேரளாவில் புராதனப் பொருட்களை விற்பதாக மோசடி செய்த மோன்சன் மாவுங்கல் என்பவருக்கு உதவியதாக சுதாகரன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், மோசடி வழக்கில் தன்னை சிக்க வைக்க பினராயி விஜயன் சதி செய்வதாக சுதாகரன் கூறியுள்ளார். குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு தாம் ஆஜராகப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்