சென்னையில் 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் | Bok Fair

x

சென்னையில் 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் .எம்.சி.ஏ. மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி புத்தக கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார். இன்று முதல் வரும் 23-ஆம் தேதி வரை சென்னை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 800 அரங்குகளும், தற்காலிக மேடையும் அமைக்கப்பட்டு தயாராக உள்ளன. அரங்குகளில் புத்தகங்கள் அடுக்குவது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் இரவுபகல் பாராமல் மும்முரமாக ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்