ரூ.2,877 கோடி மதிப்பில் தொழில்நுட்ப மையங்கள்-திறந்து வைக்கிறார் முதல்வர்

x

தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களை 4.0 தரத்தில் நவீன தொழில் நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆண்டு போடப்பட்டது .

இதன் மூலம் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய எந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள், மென்பொருட்கள் ஆகியவை ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். முதல் கட்டமாக 28 ஐ டி ஐ -க்களை தொழில்நுட்பம் மையங்களாக மாற்றப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ஐடிஐ களையும் தொழில் நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்