பள்ளி அருகில் பானி பூரி விற்பது போல் கஞ்சா விற்பனை... வடமாநில இளைஞர் உள்பட 3 பேர் கைது

x
  • சிதம்பரத்தில் பள்ளி அருகில் பானி பூரி விற்பனை செய்வதுபோல் கஞ்சா விற்பனை செய்து வந்த வட மாநில இளைஞர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • கடலூர் மாவட்டத்தில் கஞ்சா ஒழிப்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் போலீசார், சிதம்பரத்தில் பள்ளி அருகில் பானி பூரி விற்பது போல் கஞ்சா விற்று வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அஜய் லால் என்பவரை கைது செய்தனர், அதேபோன்று சிதம்பரம் ஓமக்குளத்தைச் சேர்ந்த முஸ்தபா என்கிற சுல்தானையும், டெல்லி என்கிற கருணாமூர்த்தியையும் போலீசார் கைது செய்தனர்.
  • அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்