சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்" தீட்சிதர்களின் வழக்கறிஞர் பேச்சு

x

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென, நடராஜர் கோ​யி​ல் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறார் பிரச்சனை தொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்