சிதம்பரம் நடராஜர் கோயிலில் மீண்டும் பரபரப்பு.. கொந்தளித்த தீட்சிதர்கள்.. கொதிக்கும் பக்தர்கள்

x

சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என பதாகை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனால், வரும் செவ்வாய்க்கிழமை வரை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்யக் கூடாது என, தீட்சிதர்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில், சிதம்பரம் தில்லைக்காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் ஆகியோர், கோயிலுக்கு சென்று பதாகையை அகற்ற முயன்றனர். ஆனால், பதாகையை அகற்றக் கூடாது என அதிகாரிகளிடம், தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அரசாணையை மீறி தீட்சிதர்கள் செயல்படுவதாகவும், இது குறித்து போலீசில் புகாரளிக்க இருப்பதாகவும், செயல் அலுவலர் சரண்யா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்