சிதம்பரம் நடராஜர் கோயிலில் பதற்றம்.. தீட்சிதர் குழந்தை திருமணம் செய்த விவகாரம்- குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது

x

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பதற்றம்.. தீட்சிதர் குழந்தை திருமணம் செய்த விவகாரம்- குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது

சிதம்பரம் நடராஜர் கோயில் செயலாளர் உட்பட 3 பேர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் குழந்தை திருமணம் செய்த விவகாரம் தொடர்பாக, கோயில் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர், மாப்பிள்ளை ஞானசேகரன், மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேசன் ஆகிய 3 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீட்சிதர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தீட்சிதர்கள், கீழ சன்னதி வழியாக கோவிலுக்கு செல்லும் வழியில் தரையில் அமர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். பின்னர், காவல் நிலையம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டதால் சிதம்பரம் நகரில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்