சிக்கன் ரைஸ் போட்ட கரண்டியாலேயே சிக்கன் ரைஸ் போட்டவரை துடிதுடிக்க அடித்த சென்னை இளைஞர்கள்

x

சென்னை திருவொற்றியூரில், ஃபாஸ்புட் கடையின் ஊழியரை, 2 பேர் தாக்கும் சிசிடிவி காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேரி என்பவர் பாஸ்புட் கடையில், மதுபோதையில் நுழைந்த 2 பேர், அங்கு பணிபுரியும் நேபாள நாட்டைச் சேர்ந்த நிர்மல் என்பவரிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர், நிர்மலை, அந்த இருவர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. தகவலின் பேரில் வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்