மாமா மகன் உயிரிழந்ததை சாதகமாக பயன்படுத்தி ரூ.3 கோடி மோசடி.. சென்னையில் வடமாநில தம்பதியின் பகீர் சம்பவம்

x
  • உறவினர் நிறுவனத்தில் இருந்து மூன்று கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
  • ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுக்கலால் சவுத்ரி என்பவர் சென்னை மற்றும் ராஜஸ்தானில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
  • இதில் சென்னையில் செயல்பட்டு வரும் கிளையை சுக்கலால் சவுத்ரியின் அக்கா மகன் ராம்லால் என்பவர் நிர்வகித்து வந்துள்ளார்.
  • ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் சென்னை வந்து கணக்கு வழக்குகளை சரிபார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்த சுக்கலால் சவுத்ரி, கடந்த 2018-ஆம் ஆண்டு தனது மகன் விபத்தில் உயிரிழந்ததையடுத்து ராஜஸ்தானிலேயே இருந்துள்ளார்.
  • இதை சாதகமாகப் பயன்படுத்திய ராம்லால் மற்றும் அவரது மனைவி சுனிதா தேவி நிறுவனத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
  • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சுக்கலால் சவுத்ரி சென்னை வந்து நிறுவன கணக்குகளை பார்த்த போது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து போலீசில் புகாரளித்துள்ளார்.
  • இதையடுத்து, ராம்லால் மற்றும் அவரது மனைவி சுனிதா தேவி தலைமறைவாக இருந்து வந்தனர்.
  • தற்போது அவர்களது செல்போன் எண்ணின் இருப்பிடத்தை அறிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்