“டமார்னு சத்தம்.. 1 நொடில முடிஞ்சிருச்சு.. உள்ள பேம்லியோட இருந்தாங்க.. என்னாச்சோ“ - நேரில் பார்த்த சென்னை பெண் பகீர் தகவல்

x

சென்னை பாரிமுனையின் ஆர்மேனியன் தெரு.. பழமையான கட்டிடங்களால் சற்று பயத்தை ஏற்படுத்தும். அங்கு 70 ஆண்டுகள் பழமையான 4 மாடி கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட கட்டிடம், திடீரென சரிந்து குப்பைமேடானது. உடனடியாக தீயணைப்பு படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியை துரிதப்படுத்த 6 பேர் மீட்கப்பட்டனர்.

காயம் அடைந்த இருவர் மருத்துவ மனைக்கு அனுப்பிவைக் கப்பட்ட நிலையில், இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக் கிறார்களா என தேடும் பணியும், இடிபாடுகளை அகற்றும் பணியும் முழூவீச்சில் தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்