சென்னையின் பிரபல ரவுடி வெட்டிக்கொலை - சரண் அடைந்த 4 பேர்

x

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி டொக்கன் ராஜா கொலை வழக்கில், திண்டிவனம் நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்தனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி டொக்கன் ராஜா. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஞாயிற்றுகிழமை மயிலாப்பூர் வந்த டொக்கன் ராஜவை, 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் டொக்கன் ராஜாவை கொலை செய்ததாக நரேஷ்குமார், மகேஷ்குமார், சபரிநாத், ராஜேஷ் ஆகியோர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மயிலாப்பூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்