"சென்னையில் நாளை 12 மணி முதல் இரவு 10 மணி வரை..."- வாகன ஓட்டிகளே உஷார்..!

x
  • இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, நாளை காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை, பெல்ஸ் சாலையும், கெனால் ரோடும் தற்காலிக ஒருவழி பாதைகளாக மாற்றப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
  • காமராஜர் சாலையிலிருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்கள், உரிய அனுமதி அட்டை இல்லாவிட்டால் அனுமதிக்கப்படாது எனவும் காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலைகள் வழியாக குறிப்பிட்ட எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டை உடைய வாகனங்கள், வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம் எனவும், அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், கடற்கரை உட்புறச் சாலைக்கு சென்று வாகனங்களை நிறுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்