54 பயணிகளுடன் சென்ற சென்னை பேருந்துக்கு நேர்ந்த விபரீதம் - ஒரே சாலையில் 3வது விபத்து

x

திருச்சியில் தனியார் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. சென்னையிலிருந்து குமரி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, திருச்சி மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டம் போலீசார் பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 54 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 4 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். கடந்த 4 மாதங்களில் 3வது முறையாக இதே பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்