சென்னை TO கோவைக்கு சீறிப்பாய சென்ட்ரலில் காத்திருக்கும் வந்தே பாரத் ரயில்-சிறப்பம்சங்கள் என்னென்ன..?

x

சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்.

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி.

வந்தே பாரத் ரயிலின் 12வது சேவை இதுவாகும், 5.50 மணி நேரத்தில் சென்னையில் இருந்து கோவையை சென்றடையலாம்.

ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும்.

ரயிலின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வரை இருக்க வாய்ப்பு.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10வது நடைமேடையில் வந்தே பாரத் ரயில் நிறுத்தி வைப்பு.

9,10, 11 நடைமேடைகளில் பயணிகள் வருகைக்கு தடை.

9, 10 ஆகிய நடைமேடைகளில் முக்கிய விருந்தினர்கள் செல்ல மட்டுமே அனுமதி.

பிரதமர் வருகையின் போது புறநகர் மின்சார ரயில்கள் சில நிமிடங்கள் நிறுத்தி வைக்க ஏற்பாடு.

சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்.


Next Story

மேலும் செய்திகள்