ரூ. 28 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைகள் திருட்டு... லாரியில் பட்டுப்புடவைகளை அள்ளிச் சென்ற கடை ஊழியர் - வேலைக்கு சேர்ந்த ஒரே மாதத்தில் கைவரிசை

x

சென்னை, தி. நகரில் அமைந்துள்ள துணிக்கடை குடோனில் இருந்து 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவைகளை கடை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் நடத்தி வரும் துணிக்கடையில் கடந்த மாதம் ராஜஸ்தானை சேர்ந்த பெஹராம் என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், துணிக்கடையின் குடோனில் இருந்து 28 லட்சம் ரூபாய் மதிப்புடைய பட்டுப்புடவைகளை பெஹராம் திருடிச் சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்