சிறையில் இருந்து வெளியே வந்த கணவன்... மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர்.. நண்பருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம் - சென்னையில் அதிர்ச்சி

x
  • சென்னையில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • சென்னை அடுத்த நீலாங்கரையை சேர்ந்தவர் கண்மூடி முருகன்.
  • 20 வயதான இவர் துரைப்பாக்கம் மேட்டுகுப்பம் பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, சம்பவத்தன்று அபினேஷ் என்பவர் முருகனை மது அருந்த அழைத்து வந்தது தெரியவந்தது.
  • இதையடுத்து, துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த அபினேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில், ஒரு வழக்கில் அபினேஷ் சிறை சென்றபோது, அபினேஷின் மனைவியுடன் முருகன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த அபினேஷ், நண்பர்களின் உதவியுடன் முருகனை மது அருந்த அழைத்து கத்தியால் குத்தி கொலை செய்தது அம்பலமானது.
  • இதையடுத்து, அபினேஷ் உட்பட அவரது நண்பர்கள் 8 பேரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளிகளான இருவரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்