பெண்களை இழிவுபடுத்தி காமெடி..வில்லுப்பாட்டு நிகழ்வில் கொந்தளித்த கனிமொழி..

பெண்களை இழிவுபடுத்தி காமெடி..வில்லுப்பாட்டு நிகழ்வில் கொந்தளித்த கனிமொழி..
x


சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி.கடந்த 5 நாட்களாக மொத்தம் 16 இடங்களில் நடத்தப்பட்ட இந்த திருவிழா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் நடந்த இறுதி நாள் நிகழ்வில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார்.

இந்த விழாவில் நெல்லையை சேர்ந்த கலைமாமணி வேலவன் சங்கீதா குழுவினர் வில்லுப்பாட்டு இசைத்தனர்.

அப்போது வில்லுப்பாட்டில் பெண்களை இழிவுபடுத்தும் சில நகைச்சுவைகள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் முடிவில் கலைஞர்களை கவுரவித்த கனிமொழி, வெறும் நகைச்சுவைக்காக மட்டும் பெண்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், பெரியாரை படிக்கும்படியும் கலைஞர்களிடத்தில் அறிவுறுத்தினார். இ

ந்த சம்பவம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.


Next Story

மேலும் செய்திகள்