ரோகிணி திரையரங்கில் அனுமதி மறுப்பு விவகாரத்தில் புதிய திருப்பம்..!

x
  • சென்னை ரோகிணி திரையரங்கில், பாதிக்கப்பட்டவர்களின் அளித்த புகாரின்பேரில், எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
  • சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் மறுத்தது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த விவகாரத்தில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட 4 பேரை விசாரணைக்கு அழைத்தது.
  • பாதிக்கப்பட்டவர்கள் அளித்த சான்றிதழை காவல்துறை சரிபார்த்துள்ளது.
  • பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த சாதிச்சான்றிதழ் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வருமா? எனவும் பொன்னேரி தாசில்தாரிடம் காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்