"சென்னையில் இது தான் முதல் முறை" - தமிழ் நூல்களுக்கு புதிய அங்கீகாரம்

x

தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் 46வது புத்தகக் கண்காட்சி வரும் 6ஆம் தேதியிலிருந்து நடைபெற உள்ளது.

இதே வளாகத்தில் சர்வதேச புத்தக கண்காட்சியும் நடக்கிறது.

இதற்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ச

ர்வதேச புத்தக கண்காட்சி இம்மாதம் 16, 17, 18-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து , கனடா, அர்ஜென்டினா, துருக்கி, பிரான்ஸ், இத்தாலி , சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ் , ஜப்பான், கொரியா உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் இந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்கிறார்கள் என்றும் பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்