சென்னையை மிரட்டிய பருவமழை - வெள்ளக்காடான ஜி.பி.சாலை | Chennai Rainfall | Tn Rainfall

x

சென்னையை மிரட்டிய பருவமழை - வெள்ளக்காடான ஜி.பி.சாலை

கனமழை காரணமாக சென்னை ஜி.பி.சாலை பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.சென்னை ராயப்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அண்ணா நகரிலிருந்து ராயப்பேட்டை செல்லும் ஜி.பி சாலை மற்றும் வள்ளூவர் கோட்டம் பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கியது. தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில், தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்