"அடுத்த 3 மணி நேரம் மழை மிக உக்கிரமாக இருக்கும்" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x

திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மாநகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகளில், மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக ஈடுபட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்