போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள்

x

குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள் என்று காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை பெருநகர காவலர்கள் மற்றும் அமைச்சு பணியளார்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் போலீசாருக்கு மருத்துவ உதவி தொகை என ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், சென்னையில் பணிபுரிபவர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர முடியும் என்றும், பணி மாறுதல் வந்தாலும் குழந்தைகளை இடமாற்றம் செய்யாமல் படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்