PFI அமைப்பு அலுவலகத்தில் ரெய்டு.. கோர்ட்டில் சரணடைந்த முக்கிய நபர் - சென்னையில் பரபரப்பு

x

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் நடந்த சோதனையில் தொடர்புடைய முக்கிய நபர் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் மதுரையை சேர்ந்த முகமது சிகம். இவர் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்பு சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரண் அடைந்த முகமது சிகமை டிசம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். போலீஸ் பாதுகாப்புடன் சரணடைந்த முகமது சிகமை புழல் சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்