ஓடும் ரயிலில் போனை பறித்த சிறுவன்.. படியில் அமர்ந்தவர் கை, கால் துண்டான கொடூரம்.. பிழைப்பு தேடிவந்தவருக்கு சென்னையில் சோகம்

x
  • திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் அப்துல்கலீம். இவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்த நிலையில், கடைக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்குவதற்காக சென்னை வந்துள்ளார்.
  • இந்நிலையில், வந்த வேலை முடிந்து தனது நண்பருடன் ரயிலில் வாணியம்பாடி திரும்பிய அப்துல்கலீம், ரயில் படிக்கட்டில் செல்போன் பேசியவாறு பயணித்ததாக தெரிகிறது.
  • ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே வந்தபோது தண்டவாளம் அருகே நின்றுகொண்டிருந்த 15 வயது சிறுவன், அப்துல்கலீமிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
  • இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அப்துல்கலீம், ரயிலில் சிக்கி இடது கை மற்றும் வலது கால் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதையடுத்து, அப்துல்கலீமை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த ரயில்வே போலீசார், 15 வயது சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.
  • இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
  • இதில், சிறுவன் செல்போனை விற்று மது அருந்தியது தெரியவர, சிறுவனை சீர்திருத்தப்பள்ளில் அடைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்