இளைஞர்கள் செய்த செயலால் சென்னை மெட்ரோவில் பரபரப்பு

x

சென்னை, மெட்ரோ ரயிலில் மதுபோதையில் பயணிக்க முயன்ற இளைஞர்களை, ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓமந்தூரார் மெட்ரோ ரயிலில் ஆறு இளைஞர்கள் டிக்கெட் எடுத்து கொண்டு ரயிலில் ஏற முயன்றுள்ளனர். அப்போது ஆறுபேரையும் தடுத்து நிறுத்திய மெட்ரோ ஊழியர்கள், மதுபோதையில் இருப்பதாக கூறி ரயிலில் பயணிக்க அனுமதி மறுத்துள்ளனர். இதனால், ஊழியர்களுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பானது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர்கள் 6 பேரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்