உயிர்களை பறித்த அதிவேகம்... இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதிய கார் - அடுத்தடுத்து உயிரிழந்த அக்கா, தம்பி

x

சென்னை மேடவாக்கத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோடிய விபத்தில் பெண்ணும் அவரது சகோதரனும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பம்மல் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த கலைச்செல்வியும் அவரது தம்பி சந்தோஷ் குமாரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்த கலைச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ்குமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த மறைமலை நகரைச் சேர்ந்த ஆலம் என்பவரைக் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்