பாக்கெட்டில் இருந்து காணாமல் போன செல்போன்.. விசாரிக்க சென்றவருக்கு 15 வயது சிறுவனால் நேர்ந்த கொடூரம்

x
  • சென்னை கண்ணகி நகரில், கொலை முயற்சியில் ஈடுபட்ட தந்தை மற்றும் அவரது 15 வயது மகனை, போலீசார் கைது செய்தனர். சுகுமாறன் என்பவர் மது அருந்திவிட்டு, அவரது வீட்டு வாசலில் தூங்கியுள்ளார்.
  • பின்னர் கண்விழித்து பார்த்தபோது, பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போயுள்ளது.
  • சந்தேகத்தின் பேரில் செல்வம் என்பவரின் 15 வயது மகனை, சுகுமாறன் விசாரித்துள்ளார்.
  • அப்போது வாக்குவாதம் முற்றியதில், 15 வயது சிறுவன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, சுகுமாறனை தாக்கியுள்ளார்.
  • மேலும், சிறுவனின் தந்தையான செல்வமும் இரும்புக் கம்பியால் தாக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்