சென்னையில் வீடு தோறும் குடிநீர் திட்டம் ..."இப்போ வெளிப்படையாக சொல்ல முடியாது" - அமைச்சர் சொன்ன தகவல்

x
  • சென்னையில் வீடு தோறும் குடிநீர் தரும் புதிய திட்ட பணியை தொடங்க இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
  • சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் சுமார் 27 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள பாதாள சாக்கடைத் திட்ட பணிகளுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
  • வார்டு எண் 152-ல் தொடங்கப்பட்டுள்ள இந்த பணி 82 தெருக்களில் நடைபெற உள்ளதாகவும் இதன் மூலம் கிட்ட தட்ட 20 ஆயிரம் மக்கள் பயனடைய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
  • திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் வீடு தோறும் குடிநீர் தரும் புதிய திட்ட பணியை தொடங்க இருப்பதாகவும் அதை மானிய கோரிக்கையில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்