சென்னை சாலையில் மயங்கி விழுந்தவர்...பையில் கோடிக்கணக்கில் தங்க நகைகள் - கெட்டதிலும் ஒரு நல்லது போல் அடுத்து நடந்த சம்பவம்

x

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள நகை கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருபவர் ஹரிஹரன். இவர் மேற்கு மாம்பலத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த மதுரவாயில் போலீசார், ஹரிஹரனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவத்தின் போது ஹரிஹரனிடம் இருந்த பை ஒன்றில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருந்ததை கண்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஹரிஹரன் நகைகடையில் பணிபுரிவது போலீசாருக்கு தெரியவர, உரிமையாளரை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட நகைக்காண ஆவணங்களை உரிமையாளர் காண்பித்ததையடுத்து, 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பத்திரமாக திரும்பி ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்