சாலையில் தலைக்கவசம் விற்ற நபருக்கு தலையில் வெட்டு - காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம்

x
  • சென்னை திருமுல்லைவாயிலில், சாலையில் தலைக்கவசம் விற்றுக் கொண்டிருந்த இளைஞரை, மாமூல் கேட்டு அரிவாளால் தலையில் தாக்கிய கஞ்சா போதை ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
  • பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா குமார் சிங் என்ற இளைஞர், திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே, சாலையோரத்தில் தலைக்கவச் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில், கஞ்சா போதையில் வந்த 2 இளைஞர்கள், தலைக்கவசம் எடுத்துக்கொண்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர்.
  • இதனை தட்டிக் கேட்ட ராஜா குமார் சிங்கிடம், மாமூல் கேட்டு மிரட்டியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் தாக்கியுள்ளனர்.
  • இதில், தலையில் வெட்டுப்பட்ட நிலையில், ரத்தம் வழிந்தபடி, அருகில் இருந்த காவல்நிலையத்தில் ராஜா குமார் சிங் புகார் அளித்தார்.
  • அதன் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து, கஞ்சா போதை ஆசாமிகள் இருவரை போலீசார் விரைந்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நந்தவன மேட்டூரை சேர்ந்த சதீஷ், ராகேஷ் என தெரியவந்தது.
  • இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது, இருவரும் அங்கிருந்த செய்தியாளர்களை, மிரட்டும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்