சென்னை விட மனசு இல்ல போல.. - நாள் முழுக்க என்னா அடி..! | Chennai | Rain

x

சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதலே இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதியான மதுரவாயல் பகுதியில் காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து, தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஆவடி சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி கிடப்பதால், காலையில் பணிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்