மோசமான வானிலையுடன் பெங்களூரு..சென்னை வந்த விமானங்கள்..நள்ளிரவில் பரபரப்பு

x

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானம் உள்ளிட்ட 14 விமானங்கள், மோசமான வானிலையால் அங்கு தரையிறங்க முடியாமல் போனது. இதனையடுத்து, அந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கின. இதனால், விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, பயணிகளுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர், பெங்களூரில் நிலைமை சீரானதும், அனைத்து விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக பெங்களூரு புறப்பட்டு சென்றன...


Next Story

மேலும் செய்திகள்