சென்னை மின்சார ரயில் நிற்காமல் சென்றதால் பரபரப்பு - பயணிகள் அதிர்ச்சி

x

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு சென்ற மின்சார ரயில், புளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காததால், பரபரப்பு ஏற்பட்டது. புளியமங்கலம் ரயில் நிலையத்தில், நிற்பது போல் நின்று உடனடியாக புறப்பட்டு சென்றதால், கீழே இறங்க முயன்ற பயணிகள் சுதாரித்துக் கொண்டு ரயிலுக்குள் நின்றனர். இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர், அரக்கோணம் ரயில் நிலையம் வந்த உடன், புளியமங்கலத்தில் இறங்க வேண்டிய பயணிகள், ஓட்டுரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்