Drunk And Drive : ஃபைன் போட்ட போலீஸ் -“மனைவியிடம் இளைஞர் புலம்பல்..“ -அடுத்து எடுத்த விபரீத முடிவு

x
  • சென்னையில் மதுஅருந்தி வந்த இளைஞரின் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இளைஞர் மன உளைச்சலில் தற்கொலை செய்த கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் திமுக இளைஞர் அணி தலைமையகத்தில் டேட்டா எண்ட்ரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
  • இந்நிலையில், சம்பவத்தன்று நண்பர்களுடன் மது அருந்தி வந்த நிஷாந்திடம் போலீசார் அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
  • இதனால், நிஷாந்த் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பவம் குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்